Inspired by my dear friends & cousins, I am here to mark a beginning to break out my thin thoughts, magical moments, exhilarant experiences!.
To start with, let me share the birthday wishes madal I sent to one of my friends..i dedicate this to all my dear friends!
திருமகனே .. பிறந்த நாள் காணும் எங்கள்
தானை தலைவனே!
தங்கத்தளபதியே!
தெவிட்டாத இன்பமும்
துள்ளும் இளமையும்
துவளாத உறுதியும்
தெளிவான சிந்தனையும்
தக தகவென ஒளிரும் அறிவுச்சுடரும்
துளி துளி அறிவுரைகளை அள்ளி வீசும் நின் அன்பும்
துன்பம் நேர்கையில் கைகொடுக்கும் நின் நட்பும்
தொலையாத பொன்சிரிப்பும்
தாமரை மேல் நீர் போலும்
தனக்கென வாழா நின் பண்பும்
திரும்பிப்பார்க்க வைக்கும் நின் கடமை உணர்ச்சியும்
தன்னை வருத்தி உலகை சிறக்க வைக்கும் அர்ப்பணிப்பும்
தனியாக சிங்கம் போல நடந்துவரும் நின் பாங்கும்
தன்னிகரில்லா நேரம் தவறாமையும்
தண்ணீர் நிரந்த மேகமனமும்
தஞ்சமென வந்தாரின் உறைவிடமும்
தோன்றலின் இவன் போல் தொன்ருகவென வாழும் விவேகனந்தருமாகி
தந்தம் போல் விலையில்லா
தூண்டினால் புலியுமாகி
தோண்டினால் புதயலுமாகி
தடங்காது ஓயாது உழைத்து
தாக்கினாலும் மலை போல் தாங்கி
தூக்கினாலும் அடக்கத்துடன் அமர்ந்து
துளைத்தாலும் அசராது
தேடினாலும் ஓடி வந்து
தடுத்தாலும் தெரித்து வந்து
தோளுக்கு தோள் கொடுத்து
தோழருக்கெல்லாம் தோழராகி
தூள் தூளாக தீமையை உடைத்து
தீயாக தீயன பொசுக்கி
தாயாக தாயகம் காத்து
தியாக செம்மலாகி
தும்மல் வந்தால் தலை தட்டும் கையாகி
துயரம் வந்தால் அரவணைக்கும் தந்தையாகி
தென்னை போல் அனைத்தும் தந்து
தூங்காமல் சேவை செய்து
தொலைபேசியை எந்நேரமும் உடன் கொண்டு
தொல்லையென சிணுங்காமல் சிதறாமல்
தாங்காத சொல் தாங்கி
தம்பிகளுக்கெல்லாம் தமயனாகி
தும்பிக்கும் நண்பனாகி
தென்றலுக்கே காற்று தந்து
துயர் தீர்க்கும் மருந்தாகி
துணிவும்
துடிப்பும்
திறமையும்
தொண்டும் சிறந்து
தென் துருவம் தாங்கி
தாய் மொழி தமிழுக்கு புகழ் சேர்த்து
தொள்ளாயிரம் சாதனைகள் செய்து
தாங்கள் என்றென்றும் சிறப்புடன் வாழ்கவே! வளர்கவே!
இவன்
சேதுராமன்!
Saturday, January 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment